கணினியில் ஓவியம் வரைய உதவும் எளிய மென்பொருள்


கணினியில் ஓவியம் வரைபவர்களுக்கு போட்டோஷாப், கோரல்டிரா, இல்லஸ்ட்ரேட்டர் எனப் பல வகை வணிக மென்பொருள்கள் உள்ளன.
ஆனால் ஓவியம் வரைவதற்கென்று இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஓரிரு மென்பொருள்களில் தற்போது வந்துள்ள ஸ்மூத் டிரா (Smooth Draw) மென்பொருள் சிறந்ததாக உள்ளது.

இதில் பேனா (Pen), பென்சில் (Pencil), வாட்டர் கலர் (Water Colour), ஏர் ஸ்பிரே (Air Spray) எனப் பல்வேறு விதமான பிரஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. போட்டோஷாப் போன்ற முன்னணி மென்பொருள்களில் உள்ள பிளர் (Blur), சார்ப்னஸ்(Sharpness), பர்ன்(Burn), ஸ்மட்ஜ்(Smudge) டூல்களும் லேயர் (Layar) வசதியும் இதில் உள்ளது. எளிய தோற்றமும், எவரும் புரிந்து கொள்ளும் விதமாகவும் வடிவமைக்கப்பட்ட இம்மென்பொருளில் வரைந்த படங்களை JPEG, PNG, TIFF, BMP, GIFF உள்ளிட்ட முன்னணி படக் கோப்பு வடிவங்களாக சேமிக்கமுடியும்.
2 எம்பி அளவேயுள்ள இம்மென்பொருள் இலவசமாகக் கிடைக்கிறது. தரவிறக்கம் செய்ய: http://www.smoothdraw.com/
. Related Posts with Thumbnails

மாற்றங்களை ஏற்படுத்தும் சமூக வலைத்தளங்கள்!


மூக வலைத்தளங்கள் பொழுது போக்கிற்கானது என்பதையும் தாண்டி இன்று கருத்துப் பரிமாற்றம், தகவல் பரிமாற்றம், தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, சமூகப் பணிகளுக்கு என்று பல பரிமாணங்களுடன் மாறியிருக்கிறது.
தொடக்கத்தில் மின்னஞ்சல் கணக்கு வைத்திருப்பது கௌரவமாகக் கருதப்பட்டது.  ஆனால் இன்று அந்நிலை மாறி சமூகவலைத்தளக் கணக்கு வைத்திருப்பதே ஒரு கௌரவமாக பார்க்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் மின்னஞ்சல் முகவரியை கேட்கும் இளைகஞர்களைவிட ஃபேஸ்புக், டிவிட்டர், ஜிபிளஸ், ஆர்குட், யுடியூப் கணக்கு குறித்த பேச்சே அதிகமாக இருக்கிறது.
வருங்காலத்தில் மின்னஞ்சல்களே இல்லாமல் போகும் சூழல்கூட ஏற்படலாம் என்று தொழில்நுட்பத் துறையினர் கூறும் அளவிற்கு சமூக வலைத்தளங்கள் வளர்ந்துள்ளன. இதற்குக் காரணம் மின்னஞ்சலை விட வேகமான செய்திப் பரிமாற்றம் சமூக வலைத்தளங்களில் நடைபெறுவது
தான். தற்போது கையடக்க கணினியாக வலம் வரும் ஸ்மார்ட் போன், டேப்ளட் பிசி ஆகியவற்றின் மூலமாகப் பெருமளவு சமூக வலைத்தள உறுப்பினர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது அதிகரித்துள்ளது.
இன்று சுமார் 314 கோடி மின்னஞ்சல் கணக்குகள் உள்ளன. இதில் ஒரு நபரே நான்கு, ஐந்து மெயில் ஐடிகள் வைத்திருப்பதும் உள்ளடங்கும்.  சமூக வலைத்
தளங்களில் உறுப்பினராக உள்ளவர்களின் எண்ணிக்கை ஃபேஸ்புக்கில் 80 கோடியும், டிவிட்டரில் 20 கோடியும், லிங்க்டு இன் தளத்தில் 13.5 கோடிப் பேரும், குரூப்ஆன் தளத்தில் 11.5 கோடிப் பேரும், கூகுள் பிளஸ்ஸில் 9 கோடிப் பேரும், சீனாவைச் சேர்ந்த சமூக வலைத் தளங்களான ரென்ரென் 17 கோடிப் பேரையும், கியூ ஜோன் 50 கோடிப் பேரையும், சினா வைபோ 25 கோடிப் பேரையும், மற்றுமுள்ள பிற சமூக வலைத்தளங்களில் சுமார் 50 கோடிக்கும் அதிகமானோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதன் மூலமாக சமூக வலைத்தள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 276 கோடிக்கும் அதிகம் என்று தி ரியல் டைம் ரிப்போர்ட் டாட் காம் இணையதளம் மதிப்பிட்டுள்ளது. இதில் இந்தியர்கள் சுமார் 45 கோடிப் பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்கண்ட கணக்கீடு மின்னஞ்சல் பயனர் எண்ணிக்கைக்கு இணையானதாகும். வரும் நாட்களில் இது மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே உள்ளது.
அதேபோல ஒரு நாளுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்களின் எண்ணிக்கை சுமார் 24700 கோடி என்றும், சமூக வலைத்தளங்களில் அதே ஒரு நாளில் சுமார் 42 கோடி புதிய பதிவுகளும், 19 கோடி புகைப்படப் பதிவேற்றங்களும், 73 கோடி கருத்துக்களும் பரிமாறிக் கொள்ளப்படுவதாக உலக அளவிலான சமூக வலைத்தளக் கணக்கெடுப்பு டிசம்பர் 2011 குறிப்பிடுகிறது.
இன்று சமூக வலைத்தளங்களில் தனி நபர்கள் மட்டுமல்லாமல் நிறுவனங்களும் உறுப்பினர்களாக மாறியுள்ளனர். இதன் மூலம் பொருட்களை விளம்பரம் செய்யவும், வாடிக்கையாளர்களின் கருத்துக்களை நேரடியாக அறிந்து கொள்ளவும் முடிகிறது.வர்த்தகம் சார்ந்து இல்லாமல் இரத்த தானம், எய்ட்ஸ் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் எனப் பல உதவிகரமான சேவைகளுக்கும் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எகிப்து புரட்சி, வால்ஸ்ட்ரீட் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களுக்கும்  ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையதளங்களே தகவல் தொடர்பு காரணிகளாக செயல்பட்டன.இதன் எதிரொலியாக பல்வேறு நாடுகளும் இத்தளங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அமெரிக்காவும் அத்தகையதொரு சட்டத்தை இயற்றும் முயற்சியாக சோபா (SOPA ACT) சட்டத்தைக் கொண்டு வர முனைந்தது. ஆனால், கடும் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக இது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Sources:
http://www.slideshare.net/stevenvanbelleghem/social-media-around-the-world-2011
http://therealtimereport.com/2012/01/20/social-networking-stats-google-hits-90-million-users-rltm-scoreboard/
.
. Related Posts with Thumbnails

கறுப்பு வெள்ளைப் படத்தை வண்ணப் படமாக மாற்ற


கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களை வண்ணப் புகைப்படமாக மாற்ற எளிமையான ஒரு மென்பொருள் உள்ளது.
இம்மென்பொருளில் உள்ள ஒரு பிரஸ் டூலைக் கொண்டு எந்த ஒரு கறுப்பு வெள்ளை (Black & White) மற்றும் கிரேஸ்கேல் (Grayscale) படத்தை நாம் விரும்பும் வண்ணத்தில் பிரஸ் செய்து மாற்றமுடியும்.

இம்மென்பொருளின் பெயர் இன்ஸ்டண்ட் போட்டோ கலர் (Instant Photo Color) ஆகும். 5 எம்பி அளவுள்ள இது இலவசமாகவே கிடைக்கிறது.   இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய: http://clipping-path-studio.com/instantphotocolor/ Related Posts with Thumbnails

விரைவில் வெளிவரவிருக்கும் விண்டோஸ் 8 இயங்குதளம்

உலகின் பெரும்பாலான கணினிகள் பயன்படுத்தப்படும் விண்டோஸ் இயங்குதளத்தின் புதிய பதிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளிவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் சோதனைப் பதிப்பு (Beta Version) வரும் பிப்ரவரி மாதத்தில் கிடைக்கும் என்று தெரிகிறது.
விண்டோஸ் 7 (Windows 7) பதிப்பின் வெற்றியைத் தொடர்ந்து மேலும் புதிய வசதிகளுடன் இவ்வியக்கத் தொகுப்பை வடிவமைத்து வருகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
இத்தொகுப்பு அடுத்த தலைமுறைக் கணினிப் பயன்பாடு என்று கூறப்படும் ஸ்மார்ட் போன் (Smart Phone), டேப்ளட் பிசி (Tablet PC) ஆகியவற்றிலும் பயன்படுத்தக் கூடிய வகையில் தயாரிக்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும்.
மேலும் இதனை விற்பனை செய்யவும், கூடுதல் மென்பொருள்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளவும் வசதியாக விண்டோஸ் ஸ்டோர் (Windows Store) என்ற ஆன்லைன் கடையையும் திறக்கிறது மைக்ரோசாப்ட். இது ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோர் (Apple Application Store) மற்றும் கூகுள் ஆண்ட்ராய்ட் மார்க்கெட் (Google Android Market) ஆகிய வலைத்தள மென்பொருள் விற்பனை நிலையங்களை ஒத்த ஒரு வியாபார யுக்தியாகும்.
இதன் வாயிலாக இணைய இணைப்பின் மூலம் மட்டுமே விண்டோஸ் 8 இயங்கு தளத்தை நிறுவ முடியும் என்ற சூழலை மைக்ரோசாப்ட் உருவாக்கவிருக்கிறது. ஆகவே சிடி/டிவிடிக்களில் இவ்வியங்குதளம் வெளியிடப்படமாட்டாது என்பது உறுதியாகிறது.
இத்தகு யுக்தியைப் பயன்படுத்துவதனால் தற்போது உரிமை பெறாமல் (Pirated Software) பயன்படுத்தி வரும் விண்டோஸ் இயக்கப் பயனரை கட்டண முறைக்கு உட்படுத்துவது எளிதாகும் என்று மைக்ரோசாப்ட் கருதுவதாகத் தெரிகிறது.
மேலும் இந்த இணையதளத்தில் விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான கூடுதல் இயக்க மென்பொருள்களும் (Addon Applications) வழங்கப்படவிருக்கின்றன. இதற்கான மென் நிரல்களை எவர் வேண்டுமானாலும் வடிவமைத்து வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாவா (JAVA), சீ சார்ப் (C#), விசுவல் பேசிக் (Visual Basic) ஆகிய நிரல் மொழி
களைப் பயன்படுத்தி இத்தகு அப்ளிகேஷன் மென்பொருள்களை உருவாக்க முடியும். இதற்கான டெம்ப்ளேட்கள், டூல்ஸ் ஆகியவற்றை மைக்ரோசாப்ட் நிறுவனமே வழங்குகிறது.
. Related Posts with Thumbnails

wibiya widget